Saturday, October 29, 2011

உன்னை விட்டு பிரிகிறேன்


அன்பே
என் காதலின் கண்ணியத்தை
புரிந்து கொல்லாத
தூயவனே!!!
உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன்....

உன்னால் எனக்குள்
உண்டான தனிமை
பொழுதுகள் தணியாத
பகைமையை உன்னிடத்தில்
உண்டாக்குவதால்,
உண்மை காதலோடு உன்னை
விட்டு பிரிகின்றேன்....,

காதலே!!!!

விதி வலியது.....
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது....

உன்னை விட்டு பிரிந்தாலும்
என்றும் என்னை தொடரும்
உன் காதல் நினைவுகளை
பத்திரமாய் எனக்குள்
விதைத்துக்கொள்கின்றேன்....

உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன் ......

No comments:

Post a Comment