Wednesday, April 20, 2011



வெயில்
கொளுத்தும் வெயிலில் கோவம் பீரிட்டு வீசுகின்றோம் நாம் இருவரும்


இதமான மழையில் இதயம் நனைப்போம்

நீயும் என் அருகில் இல்லை
நானும் உன் அருகில் இல்லை
ஆனால்
நம் இருவரின் மனதும் பின்னி பிணைந்து உள்ளனவே...

நம் கோவம் தீர்ந்ததை அந்த வான் தேவதை அறிந்து
இந்த மழை எனும் வரம் தந்தாலோ


நம் கண்ணின் கண்ணீர் துளியை அறிந்து
அவள் காதல் துளியால் நம்மை குளிர செய்கிறாள்

நம் மனமும்
நம்மை வாழவைக்கும் மண்ணும் குளிர்கின்றது

என்றும் இணைந்தே இருப்போம்
கொஞ்சம் வெயில்
கொஞ்சும் மழை

ஓடிப்போலாமா ?






காதல்
கதைகளில் மூழ்குகிறேன்
காதல் கவிதைகளில் கலங்குகிறேன்
காதல் படங்களில் பதறுகிறேன்
காதல் பாடல்களில் பயணிக்கிறேன்



திக் திக் திக் திக்


என்ன இது







என் தாயின் இதய துடிப்பு இட வலம் மாறி மாறி அடிக்கின்றது

ஆமாம் என் நிலை அறிந்து என்னை கேக்கிறாள்

நீ கண்டிப்பாக ஓடி போக போகிறாய் என்று



நானோ என் மனதினுள் புன்னகைக்கிறேன்
உங்கள் இருவரையும்
இப்படி உருகி உருகி காதலிக்கும் எனக்கு காதல் புதிதில்லை


என்னோட என் வாழ்க்கைய ஓட்ட ஓடி வரும் ஒருத்தியை
நீங்கள் இருவரும் கை பிடித்து தர ,,, நாம் அனைவரும் சேர்ந்து அந்த சந்தோஷ பயணத்துக்கு ஓடிப்போலாமா ?