Monday, July 4, 2011

உன்னவன்


அமைதியாய்
இருக்கும் அந்த வானத்தில்
தனிமையாய் தவிக்கும்
அந்த நிலவை போலதான்
நானும் தனித்து
தவிக்கிறேன்

சத்த மில்லா

இரவில்
சத்தமின்றி அழுகிறேன்
அமைதியின்றி என்னுள் கிடக்கும்
உன் நினைவுகளுடன்

நீ எத்திசை

போனாயோ
அத்திசை நோக்கி
புலம்புகிறேன் இன்றும்
உன்னால் பித்தனாக


இந்த பூமியில்
உன் சுவாசக்காற்று
இருப்பதால் தான்
அதன் எச்சம் பட்டு
உன் நினைவுகளுடன்
இன்றும் உயிர் வாழ்கிறேன்
நான்.............

இப்படிக்கு

உன்னவன்

No comments:

Post a Comment