Monday, May 16, 2011

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இரு இரவுகளில் என் இதயம் நனைந்ததை,
இத்தனைக்கும் இந்த இரு நாட்களும்
உன் அன்பை விட
உன் அடக்கு முறைதான் அதிகமாக உணர்ந்தேன் ,
அதில் தான்
நான் ஏங்கும் என் உறவை அறிந்தேன்
தந்தை எனும் உன் தாய்மையை

இந்த உறவு யாருக்கும் கிடைக்காது ..
தந்தையையும் தாயையும்
விலை கொடுத்தும் வாங்க முடியாது,
இழந்தவனுக்கு மட்டுமே புரியும்
அதன் அருமை....!
நான் பாக்கியசாலி
என்பதை நினைத்து பெருமிதம் கொண்டாலும்
பிரிவின் வலிமை கொடியது உன்னை காணாத போது

அண்ணன்கள் அண்ணிமார்கள்,
அக்கா, குழந்தைகள் என
என் குடும்பம் ஒரு பெரிய ஆலமரம்,
அதில் கிடைக்காத விழுதாக
உன் தனி குடும்பத்தில்
என் தனிமையை தனிக்க
தாகம் கொள்கிறேன்

விடுதியில் விடப்படும்
குடும்பம் தொலைத்த குழந்தையாய்
கண்ணீர் சிந்தும்
சிறுவனாகிறேன்,

வயதில் மட்டும் வளந்தவன்
குணத்தில்குழந்தையாய்
என்னை நானே உன்னில்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ...!!!!!



No comments:

Post a Comment