Friday, April 29, 2011

நாளைய இரவு




ஒவ் ஒரு இரவும் என்னை கேள்வி கேட்க்கிறது
நாளைய இரவு எப்போது வருமென

உன்னை சந்திக்கும் இரவை நினைத்து












என்னை சுற்றி
உறவுகள் பல இருந்தும் ...!!!
வெறுமையை உணர்த்தும் உந்தன் பிரிவு






உனக்காக


இறந்திட சொல்லும்
என் இதயம் ..!!!
உன் நினைவுகளுடன்
வாழ்ந்திடவும் சொல்லுதடா...!!!


Wednesday, April 20, 2011



வெயில்
கொளுத்தும் வெயிலில் கோவம் பீரிட்டு வீசுகின்றோம் நாம் இருவரும்


இதமான மழையில் இதயம் நனைப்போம்

நீயும் என் அருகில் இல்லை
நானும் உன் அருகில் இல்லை
ஆனால்
நம் இருவரின் மனதும் பின்னி பிணைந்து உள்ளனவே...

நம் கோவம் தீர்ந்ததை அந்த வான் தேவதை அறிந்து
இந்த மழை எனும் வரம் தந்தாலோ


நம் கண்ணின் கண்ணீர் துளியை அறிந்து
அவள் காதல் துளியால் நம்மை குளிர செய்கிறாள்

நம் மனமும்
நம்மை வாழவைக்கும் மண்ணும் குளிர்கின்றது

என்றும் இணைந்தே இருப்போம்
கொஞ்சம் வெயில்
கொஞ்சும் மழை

ஓடிப்போலாமா ?






காதல்
கதைகளில் மூழ்குகிறேன்
காதல் கவிதைகளில் கலங்குகிறேன்
காதல் படங்களில் பதறுகிறேன்
காதல் பாடல்களில் பயணிக்கிறேன்



திக் திக் திக் திக்


என்ன இது







என் தாயின் இதய துடிப்பு இட வலம் மாறி மாறி அடிக்கின்றது

ஆமாம் என் நிலை அறிந்து என்னை கேக்கிறாள்

நீ கண்டிப்பாக ஓடி போக போகிறாய் என்று



நானோ என் மனதினுள் புன்னகைக்கிறேன்
உங்கள் இருவரையும்
இப்படி உருகி உருகி காதலிக்கும் எனக்கு காதல் புதிதில்லை


என்னோட என் வாழ்க்கைய ஓட்ட ஓடி வரும் ஒருத்தியை
நீங்கள் இருவரும் கை பிடித்து தர ,,, நாம் அனைவரும் சேர்ந்து அந்த சந்தோஷ பயணத்துக்கு ஓடிப்போலாமா ?






Tuesday, April 19, 2011

பாஸ்வின்





நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்

உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...

ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்

உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...

ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்

உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்

அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட

உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........

ஆனால்,நானோ,

உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,

உன் முகம் பார்க்காத நாட்களிலும்,

உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,

உன் குரல் கேட்காத கனவுகளிலும்...

ஓவியனில்லா தூரிகையாய்...

சிற்பி தீண்டாத கற்களாய் ....

ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...

சிதறிக் கிடக்கும் சொற்களாய்....

இந்த பாஸ்வின்


தனிமை



தன்னை மறந்து


னி
நி(னி)ன்னை நினைத்து


மை
மையம் கொண்டேன் உன் மனதில்