Tuesday, April 19, 2011

உன் கரம் தீண்டும் காரம்


உன் மீது உள்ள கோவத்தை நான் யார் மீது காட்டுவேன் ....


மூன்று வேளை உணவை
மூன்று வார்த்தைக்காக இழந்தேன்

உன் குரல் கேக்ககூடாதென்ற என் ஆணவத்தை என் அன்பு அளித்தது
ஆம்,,,, உன் மீது கொண்ட அன்பு என் கோவத்தை கரைத்தது

இன்று காலை உணவோ இரு தோசைகள்
ஆம் உனக்கு பிடிக்குமே இரு தோசைகள்
நம் இரு உயிர் போலவே ....

என் தோழி கேட்டால் சட்னி ரொம்ப காரமா ? என்று
உன் மீது உள்ள காதலில் எந்த காரமும் என் கண்ணீராகவே உணர்ந்தேன்

ஆம் நம் அன்பை விட அந்த காரம் ஒன்றும் காரம் இல்லை
உன் கரம் கொண்டு அந்த கார உணவை என்று உண்பேன் ...!!!!!


விடியட்டும் அந்த ஞாயிறு
உன் கரம் தீண்டும் காரம்



Monday, April 18, 2011

தனிமை




நீயும்..? நானும்..?
இந்த உறவுக்கு பெயர் தெரிய வில்லை
தனிமையின் கொடுமையை உணர்ந்தது உண்டா...?

என் மனதை திறந்து பார்
தனிமை எனும் ராட்சசன் என்னை சிறைக்கைதியாக வைத்திருப்பதை
நீ அறிவாய்
அன்று சீதை ராவணனிடம் சிறைபட்டால்
இன்று நானே தனிமை யிடம் சிறைபட்டேன்

இந்த அசோகவனத்தில் என்னை காப்பாட்ற
உன்னை தவிர வேறு ராமனோ, அனுமனோ எனக்கு இல்லை

இது என்ன புது உறவு
என் வயதை பத்து ஆண்டுக்கு முன்னமே கைப் பட்றியவன் நீ
உனக்கும் எனக்கும் எப்படி இப்படி ஒரு நட்பு ...!


எந்த தந்தையும் மகனும் நம்மை போல் வாழ்ந்தார்கள் ?
வாழ்க்கைக்கு புது இலக்கணம் படைப்பவன் நீ
உன்னவளும் உன்னை போலவே உள்ளவளே ......!

இரு சிற்பிக்குள் அடைந்த முத்தை போல நான்,,
இன்று உன்னை விட்டு பிரிந்து,
இந்த பெரிய கடலில் நீந்த தெரியாமல் தவிக்கிறேன்
என்னை மறுபடியும் உன் தாய் மடியில்..!!!!
அதும் அந்த சிற்பிக்குள் அடை பட்டு வாழவே துடிக்கிறது என் மலர்ந்த மனது
.........................



சுதந்திரம் கொடு... சுதந்திரம் கொடு... என்று அனைவரும் கண் சிவந்து கத்தும் போது பாவமாக பார்க்கிறேன் .....
என்னை மட்டும் என் இந்த இறைவன் சுதந்திரமாக படைத்தது எதற்கு என்று
கடவுளின் குழந்தையாக பிறந்ததை எண்ணி வருத்துகிறேன் .....

உன் குழந்தையாக பிறக்க ஏங்குகிறேன்

ஆமாம் இல்லாத ஒன்றுக்கு தானே இந்த மனம் ஏங்கும்

இந்தனை நாட்களாய்
என்னை அடக்கவோ, அடிக்கவோ சிறை படுத்தவோ
அந்த இறைவனுக்கு தைரியம் இல்லை
இன்று உன்னுள் சிறை படவும்,
என்னை அடிக்கவும் அணைக்கவும் ஒரு கரம் உள்ளதை எண்ணி கண் கலங்குகிறேன்
இது ஆனந்த கண்ணீர் தான் ,,,,!!!!!!!

நான் ஏன் இப்படி ஆஹினேன்?
நீ எனக்கு யார் ?
எதற்காக இந்த அன்பு ?


எதற்காக ஒரு நிமிடமாவது
உன்னை மறக்க முடியாமல் கஷ்ட்ட படுகிறது என் மனது ?
பல கேள்விகள்
உன்னையும் என்னையும் கேட்க்கும் ......!!!!!
மனதினுள் தாக்கும் ....!!!!!!!!!

..................................

இவன் உனக்கு சென்ற ஜென்மத்தில் மகனாக பிறந்தவன்
உன் மனைவியின் ஆண் குழந்தை ஏக்கம் போக்க வந்தவன் ..

என்ன இருந்தாலும்
என் மனம் மட்டும் ஏதோ ஒன்றை நினைத்து இன்னும் ஏங்குகிறது
அது என்ன என்று தெரிய வில்லை



..............


என்னை கவிஞ்சன் ஆக்கியது நீ.... நீ... நீ மட்டும் தான்
காதலித்தால் கவிதை வருமாம்
இது சான்றோர் வாக்கு

உன்னை காதலிக்கும் வரம் தந்ததால் நான் இன்று கவிஞ்சன் ஆகுகிறேன்

தனிமையில் இந்த வார்த்தைகளை சிந்தித்து பார் தனிமையின் கைதியாக நீயும் உணர்வாய்
உன்னை சிறை வைக்க அவனுக்கும் வெகு நேரம் ஆஹாது
உன் ஆள் மனதினுள் என் நினைவுகளை அசை போட்டு பார் நீயும் கைதியாக கண்ணீர் வடிப்பாய்

...........

பழக பழக பாலும் புளிக்குமாம்
இது எப்படி சாத்தியமாகும்?

உன்னை கண்ட நாள் முதல் இந்நாள் வரை என் கண்கள் உன் நினைவுகளை தவிர வேறு நிறங்களை ஏற்க மறுக்கிறது
உன் நினைவுகள் இந்த தேவ அமிர்தத்தை விட சுவை அதிகமோ ....?

அது தான் அதை அடைய இத்தனை மன போராட்டங்களோ ...!!!!


காலம் பதில் சொல்லும்

..............


எதற்காக நான் இப்படி வேதனை படுகிறேன்
இது கேலி கூத்தாக உள்ளது
நீ என்னவன்
உன் குடும்பம், நம் குடும்பமே
இருந்தும் ஏன் என்ன புது உணர்வு, ஏக்கம் ?


தனிமை

........................................................

நீ என்னை முதல் முறை கோவப் பட்டு அடித்ததை
ஏதோ வரம் கிடைத்த பக்தனை போல திகைக்க திகைக்க ரசிக்கிறேன்
இன்னொரு முறை எப்போது என்னை உன் கோபக்கரங்கள் தீண்டும்

.................................

ஒரு வார்த்தையில் உன்னை பற்றி ஒரு கவிதை சொல்லவா

தந்தை

Thursday, April 14, 2011

ஆண்மையிலும் ஒரு தாய்மை....



நீஎன் அருகில் இல்லா நிமிடங்கள்
என் தனிமை தாய்மை அடையும் நேரம்

நீ என்னுடன் இணைத்திருக்கும் தருணங்கள்
என் தாய்மையின் பேரின்ப நேரம்

ஆம் ஒரு ஆணும் தாய்மை அடைகிறான்
அவனின் உண்மையான அன்பில்

பத்து மாதம் சுமக்கும் அன்னை,
பார்த்ததிலிருந்து பரலோகம் செல்லும் வரை சுமக்கும் அன்பாலன்,

இன்று நிறைமாத கர்ப்பிணியாக
உன்னை சுமந்து நான்

ஆண்மையிலும் ஒரு தாய்மை....


Monday, April 4, 2011

உன் உறவாகும் உயிர்




முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
நட்பாய் இணைந்தோம்...

சில உரையாடல்களில் சிரிக்க வைத்தாய்...
சில உரையாடல்களில்
சிந்திக்க வைத்தாய்.

பகலிரவு புரியாமல்,
பசித்தூக்கம் அறியாமல்,,
உன் பேச்சால்
என் உலகம் மறக்கவைத்தாய்..
நட்பாய் அறிமுகமாகி,
நாளடைவில்
நட்பின் முகவுரையை
ஏற்க மறுத்தாய்...

வளம் தேடும் இடத்தில் இருந்து
என் நலம் நாடினாய்...
கண்ணுறக்கம் தான் கெடுத்து
உரையாடினாய்...
இனிக்க பேசி
என் இரவை
இனிதாக்கினாய்...

உன்னை என் நண்பன் என நான் நினைத்தேன்
ஆனால் நீயோ ...

உன் இரு பெண்களின் அண்ணனாகவும் ஆதரவு கரம் நீட்டினாய்

இதற்க்கு உன் மனைவி எப்படி சம்மதிப்பார் என நான் கேட்ட போது நீ சொன்னாய் ..
நம் எண்ணங்களுக்கு வளிமை அதிகம் என்று
ஆம் அதை உன் இல்லத்தில் அதும் உன் இல்லத்தரசியிடம் உணர்ந்தேன்

உன் குழந்தைகள் எனக்கு,
என்ன உறவுமுறை சூட்டி அழைப்பது
என்று விளையாட்டை விளையாடும் தருணம்
உன் மனைவியின் மனதின் குரல் வெளி பட்டத்தை நாம் அறிவோம்
ஆமாம் உனக்கு நான் மகன் என்று அவர் திரு வாயால் மலர்ந்தார்
இப்போது நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியவில்லை
உனக்கு ஒரு ஆண்மகனாகவும் நானாகிறேன்

என் கனவுகளுக்கு உருவம் கொடுக்க நினைத்த உன்னை
என் கனவு நாயகனாக மனதில் இடம் கொடுக்க தவற வில்லை
அதே சமயம் உன் கண்ணின் ராதை போன்று உன்மனம் கோணாது நடக்கும் உன் ராதையின் புதல்வனாக நான் வாழ்வேன் ...


உன் ராதை எனக்கு கொடுத்த உணவு எனக்கு பிடிக்காத போதும்
அன்பு என்னும் இனிப்பை அமிர்தமாக தந்த அந்த அமிர்த கரங்களை என் மனம் எப்படி மறக்கும் ..


யாரிடமும் வெகு சீக்கிரத்தில் பழகிவிட மாட்டர்கள் என் குழந்தைகள் என்று நீ கூறும்போது .... நான் உன் குழந்தைகளை தீண்டவே பயந்தேன்

ஆனால் என் பூர்வபந்த உறவு எப்படி விட்டு போகும்...!!!
என் தங்கைகள் என்னை அடையாளம் கண்டுகொண்டதை ..


நான் தான் இந்த உலகில் புதிதாக பூத்த புதுமை பூ
ஆமாம் ஒரு தாய் ஒரு தந்தை இரு சகோதரி என சகலமும் தந்த அந்த இறைவனுக்கு நான் என் செய்வேன் ...!!!!

உன்னை தந்தையாக அடையத்தான்
என் தந்தை அந்த உறவை
என் சிறுவயதிலேயே விட்டு சென்றாரோ ...!!!!

தந்தை இல்லை என்ற என் கண்ணீர் தருணங்களை
உன் கள்ளமில்லா கரங்கள் துடைத்தன....

இவன்
உன் உறவாகும் உயிர்


Sunday, March 27, 2011

என் எண்ணையின் ஏக்கம்





உன் உடல் சூட்டை தணிக்க
எண்ணெய் எனும் என்னை உடல் முழுவதும் பூசினாய்

உன் உடலை மென்மையாக வருட உன் கை விரலுக்கும்
ஆசையை நான் தானே தூண்டினேன்

நீ பிறந்ததும் உன் தாய் என்னை கொண்டு வந்து உன் உடல் முழுதும் பூசினால் ,,,
அப்போது அவள் சொன்னால் ,,, புள்ளைக்கு இத பூசி வெயில் போட்ட பூப்போல வருவான் என...

இன்று நீ புயல் போல வந்ததற்கு நானும் ஒரு காரணம் தானே ...!!!!

உன்னை உன் சிறுவயதில் இருந்து தாங்கும் என்னை
உன் இளமை பருவத்தில்,,, எண்ணெய் வச்சா முகம் எண்ணையா வழியும் மா என்று நீ என்னை வெறுத்து போகும் போது,,,,
நான் எவளோ வருந்தி உள்ளேன் தெரியுமா ...

உன் உடல் இதற்க்கு முன்பு இப்படி ஒரு மினுமினுப்பு வந்ததில்லை என்று உன் உடலுக்கே ஒரு கர்வம் அப்படி ரசிக்கிறது உன்னையே உன்னை

இவை அனைத்தையும் தந்த என்னை பார்த்து உன் குழந்தை கேக்கிறாள்,,
அப்பா என்ன இது பிசு பிசு நு ,,,, முதலில் குளிச்சிட்டு வாங்கப்பா..... இந்தாங்க சோப்பு ......


நீ என்னை வேண்டாம் என வெறுத்தாலும்
ஏதாவது ஒரு ரூபத்தில் வருவேன்...
உன்னை... என்னை (எண்ணெய்) போல ஒருவன் காதலிக்க முடியுமா ???

Friday, October 29, 2010

தாய்








படைக்கிறாள்

காக்கிறாள்
அழிப்பதில்லை
கடவுள் தானே
தாய்














Tuesday, October 5, 2010

என் வாழ்கை




இலங்கையில்
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
இன்று இந்திய தாய் மடியின் அரவணைப்பில்,


இந்த வாழ்கை எனக்கு கிடைத்தது அதிஸ்ட்டம் தான்
ஆனால்


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !


சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?



மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?



சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!